Sunday, September 29, 2013

ஹிஹி நானும் பேட்டி எடுப்பேன் :))


 வாசகர்கள், நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அதே பழைய பேட்டி அதே தலைப்பில் அதே போட்டோவோட மீள்பதிவு.ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட சரி பண்ணலை. அப்படியே இருக்கட்டும்னு தான் :) வரலாறு முக்கியம்ல


இப்பவும் கும்மிக்கலாம்.


உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் வயித்தெரிச்சலையும், பொறாமையையும் அடக்கி கொண்டு ஒரு எழுத்தாளரா வேடம் இடுவது எவ்வளவு கடினம் என்று இந்த வலைபதிவு எழுத்தாளர்களை பார்த்தாலே தெரியும்..யாராவது ஒரு தீயனைப்பு வண்டிக்கு சொல்லி விடுவும். ஏனெனில் பேட்டி ஆரம்பம். இதையெல்லாம் தாண்டி நான்கு பேர் ஒரு குழுமம் ஆகி ஒருவரை ஒருவர் வளர்ப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். அதிலொருவர் நம் நண்பர், பார்த்துக்கொண்டிருக்கும் போதே சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்பவர், என்னதான் அடிச்சாலும் வலிக்காத மாதிரியே இருப்பது போன்றவை சாட்சிகள்.
நீங்க ஒரு எழுத்தாளர்ன்னு எப்ப கண்டுகினீங்க?

நான் எல்கேஜியில் எழுத ஆரம்பித்த போதே எங்கள் ஆசிரியர் சொன்னார், பிற்காலத்தில் மிகப்பெரிய எழுத்தாளராக வரும் வாய்ப்பு அதிகம் என்று. அன்றே முடிவு செய்த விசயம் வலைப்பூ ஒன்றை ஆரம்பித்து அதில் என் எழுத்துக்களை வடித்து அருகில் அமரவேண்டும் என்பது...
என்ன மாதிரியான பொஸ்தகம் படிக்க இஷ்டம்?

தமிழ் எழுத்துக்கள் எல்லாம் வாசிக்க பிடிக்கும், அதிலும் பழைய பேப்பர் கடையில் இருக்கும் பிரபல எழுத்தாளர்கள் அனைவரின் எழுத்தும் பிடிக்கும், ஏனெனில் அதிலிருந்து அப்படியே காப்பி அடிக்கலாம், ஒருத்தனும் அறியப்போவதில்லை. ஆனால் பதிவுலகம் வந்த பின் தான் தெரிந்தது, இங்கே இருக்கும் எல்லாரும் அப்படித்தான் என்று.
இந்த ப்லாக் எழுதி என்னாத்தை சாதிச்சே? அது உனக்கு இன்னா கொடுதுச்சு?

அது எங்கே திறந்தது, படாத பாடு பட்டு கைக்காசை செலவு பண்ணி நானல்லவா திறக்க செய்தேன். பாருங்கள் இப்போது கூட கைக்காசை போட்டு பெட்ரோல் அடித்து, பேட்டி எடுக்க என லஞ்ச் செலவு, கேள்வி எழுதி கொடுத்தும் கூட வெண்ணைய் மாதிரி இழுக்கிறாயே ...

வாசலை தவிர கம்பர்,திருவள்ளுவர் ...அவர்களுக்கு மட்டும் நான் இப்படி அவரை குதறுவது தெரிந்தால் இட்லி பொட்டலம் கட்டும் நூலில் தூக்குப் போட்டு இறந்திருப்பார். நல்லவேளை இல்லை.

நேற்றுகூட நண்பரை போனில் அழைத்து என் எழுத்தை வாசிக்க சொன்னேன், விட்டுப்போன குவாட்டரை ராவாக கவிழ்த்துவிட்டு போனிலேயே வாந்தி எடுத்தார். வல்லமை பொருந்திய எழுத்துக்கள் உருவாக இந்த நட்புக்களே காரணம்.


பலவீனம் என்று பார்த்தால் என்னைத் தவிர வேறு யாரையும் நான் எழுத்தாளரா நினைப்பதுஇல்லை. அது தெரியாமல் இந்த பைத்தியகார பயலுகள் என்னை புகழும் போது எனக்கு வரும் புன்னகையை அடக்க
முடியவில்லை.ந்த ப்லாக்ல எல்லாரும் ஒரு குரூப்பா கூடி கும்மியடிக்கரானுவளே, அத்த பத்தி என்ன ஃபீல் ??

நம்மை பதிவுலகில வாழவக்கும் தெய்வமே இந்த மனப்பான்மை தானே. கண்டிப்பா தப்பு இல்ல. சொறிதலில் உள்ள சுகம் புரிதலில் இல்ல. எதாவது புரிஞ்சுதா?

அட , இதை ஆரம்பித்து வைத்ததே நாம் தானே. ஒரு எழுத்தாளனை உருவாக்குவது எவ்வளவு சிரமம் தெரியாதா? அவன் சும்மா நான் இன்று காலை கடன் சரியாக முடித்தேன் என்று எழுதினாலும், சூப்பர் தல, :)), ரிப்பீட்டு, எப்படி சகா உன்னால மட்டும், சான்ஸே இல்லை, வாழ்த்துக்கள் என்று மாறிமாறி பின்னூட்டமிட்டு அவனை ஒரு எழுத்தாளனாக மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்க்குள் டவுடர் கழண்டுடும்.
உன்னக்கு முன்னாடி செல வஸ்தாது எழுதிகிரானுவ, அத்த என்ன நெனைக்கறே?
அன்பைப்பெறுவது அவ்வளவு எளிதல்ல , மூத்த பதிவர் இப்படி எல்லாருடைய ப்ரொபைல் முதல் கொண்டு தேடி படித்து அவர்களுக்கு என்ன பிராண்டு பிடிக்கும், எப்படி ஜிங் ஜக் அடிப்பது போன்றவைகளை கற்றுணர்ந்து, அதே பிராண்டு, ஜால்ராவை இன்று வரை தொடர்வதால் தான் முடிகிறது. இல்லனா அவனுகளோட எனக்கு என்ன வேலை.

புதிதாய் எழுத வருபவர்கள் நிஜமாவெ நல்லாவே எழுதித்தொலையாரானுக, அதைப்பார்த்து தினம் வயிறெரிந்து புலம்புவதே வாடிக்கையானது. எனக்கு முன்னாடி இருந்தவனுகளை நான் சரி செய்தது போல் ஒருத்தனும் என்னை கவனிக்கவில்லை. மதிக்கக்கூட இல்லை. ஒரு ஐநூறு பின் தொடர்பவர்கள் இருந்தால் ஒரு ஐம்பது பின்னூட்டங்களாவது வர வேண்டும், நான் பதிவு எழுதி அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்த பின்னும் முப்பது நாற்பது பின்னூட்டம் வரவைப்பதே பெரும்பாடாக உள்ளது. இப்போது புதிதாக எழுத வந்தவர்கள் நல்ல நண்பர்கள் பலரை பெற்றிருப்பதால் எளிதாக பின்னூட்டங்கள் பெறுகிறார்கள், அதை பார்த்து பொறுக்காமல் நான் யாரிடமும் பேசுவதில்லை.

இப்படியே முடிஞ்சிருமா? இல்ல பொஸ்தகம், சினிமான்னு போவுமா?

பின்ன? பத்திரிக்கைகளில் யாரையாவது கரெக்ட் பண்ணி அடிக்கடி நம் பேர் வரவும், மக்கள் வலைப்பூக்களில் வாழ்த்து சொல்லி ப்ரமோட் பண்ணவும் ஏற்பாடு பண்ணனும்.என்ன கொஞ்சம் செலவாகும், முடிஞ்சா நாம் வலைப்பூவில் எழுதியதை ஒரு தொகுப்பா போட்டு ஊறுகாயும் நாட்டு சரக்கும், பொது கக்கூஸ், பழைய மனைவியும் புது காதலியும்ன்னு எதாவது தலைப்பில் புக் போடணும். உடனே நம் சக வளர்த்து விட்ட எழுத்தாளனும் நண்பனும் புக் போடுவான். வேற வழியில்லாமல் சிரிச்சுட்டே வாழ்த்திட்டு வரனும். என்ன அதைவிட கொடுமைன்னா எவனும் அந்த புத்தகத்துக்கு விமர்சனம் எழுதாம இருக்கனும்.
இதையெல்லாம் ஒரு எழுத்துன்னு படிக்கிறானுவளே அவனுகள இன்னா பண்ணரது?

ரொம்ப பாவமா இருக்கு. பதிவ கூட படிச்சிடலாம் பின்னூட்டங்களை எப்படி தாங்கிக்குறாங்கன்னு தெரியல.கிசுகிசுன்னு ஒரு க்ரூப்புக்கே தெரிஞ்ச பதிவர்கள் பத்தி எழுதறத கூட சகிச்சுக்கறாங்க. அவங்க ரொம்ப நல்ல்ல்வய்ங்க. என்ன கொஞ்சம் பிரபலமான வெளியில் போக முடிவதில்லை. எல்லாரும் ஆட்டோகிராப் கேட்டு நச்சரிக்கிறார்கள்.. தூக்கம் கலைந்த பின் தான் தெரியுது அத்தனையும் கனவுன்னு. நடக்கனும்னு சொல்லலை, நடந்தா நல்லாருக்கும்னு தான் சொல்றேன்.
இந்த பொம்பளை பசங்க இன்னாமா கிறுக்கராங்க? உனக்கு காண்டாவுல?
ம்ம் அவர்கள் இம்சை தாங்க முடியவில்லை, குழந்தை ஜட்டி மாற்றுவதில் இருந்து, ஆயா வடை சுட்டது வரை எழுதி கொல்கிறார்கள். இதெல்லாம் எதிர்த்து யாருமே கேட்பதில்லை. சில சமயம் நல்லா வேற எழுதி தொலைக்கிறார்கள். எல்லாற்றையும் விட எரிச்சல், நான்கு பெண் பதிவர்களுக்கு மேல் எனக்கு யாரும் பின்னூட்டம் இடுவதில்லை.
நீ எத்தையோ நெனைச்சு எழுதறே, பயலுவ எத்தையோ நினைச்சு படிக்கரானுவலே?

எப்படித்தான் கரெக்டா பாயிண்டை பிடிக்கரானுக என்று தோன்றும்.
இப்படி ராவ எங்க கத்துகின?

அதெல்லாம் தானா அப்படியே வரும்.
மத்தவனுக எல்லாரும் ரொம்ப மிஸ்டேக்கா எழுதுரானுவ, இத்த நீ தட்டி கேக்க கூடாது?ஆக்சுவலி ஐ லவ் டமில் வெரி மச் யா. யாராவது என்னத்தவிர தப்பா எழுதினா கன்னா பின்னான்னு கோபம் வர்ற அளவுக்கு டமில லவ் பண்றேன். அலட்சியமா எழுதும் பதிவர்களை பார்த்து பிரமிக்கிறேன். பய ரொம்ப தெளிவா இருக்கானுக என்று.இப்பாலிக்கா இந்த ப்லாக் எப்படி இருக்கு? இனி எப்படி இருக்கும்?

நான் வரும் வரை ஆரோக்கியமாத்தான் இருந்தாது. வந்தபின் எப்படி என்பதை நாடு சொல்லும்.
உனக்கு யாருனாச்சும் எழுதுனா புடிக்குமா?

வேற யார் இருக்கிறார்கள் எப்போதும் நானும் , நீரும் , நம் சகோக்களூம் தான்.

அதை தவிர யாரையும் நான் ஊக்கு விக்க விரும்புவதில்லை..
நான் எதாச்சும் கேட்க உட்டுட்டனா?
இந்த முதுகு சொறியற சுகம் ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு எப்ப சொறியனும்?

டிஸ்கி : நல்லா கும்ம மட்டுமே இந்த பதிவு.