Tuesday, February 14, 2012

அம்மா

பிப்ரவரி மாதம் என் வாழ்க்கையில் மிக முக்கியமானது. வர்ஷா பிறந்து நான் ஒரு அம்மான்னு ஆனதும் என் அம்மா இந்த உலகைவிட்டு போனதும் ஒரு பிப்ரவரி மாதம்.  இன்றோடு ஒரு வருசம்.. முழுசாக ஒரு வருசம். எப்படி ஓடிப்போயிடுச்சு. ஒரு வாரமாகவே போன வருசம் இந்த நேரம், இந்த நாள்னு ஒவ்வொரு நாளும் எதோ ஒரு வகையில் தடுமாற்றம். பிப்ரவரி 14. ஒரு வருசம்மா.. நீ எங்களை விட்டு போயி ஒரு வருசம் ஆயிடுச்சு. உடம்பு சரியில்லைன்னு ஒரு வாரம் ஹாஸ்பிடலில் வீட்டுக்கு போனதும் கண்ணை திறந்து என்னை பார்த்தபடி போன உன் உயிர்..  அம்மா.

அம்மாவும் அப்பாவும் அடுத்தத்து தவறுவது ரொம்ப கொடுமைம்மா. எதாவது தோனும் போது,. ஒரு சந்தோசமோ துக்கமோ சட்டுன்னு சொல்ல ஒரு ஆள் இல்லையே. என்னதான் விட்டேத்தியா இருந்தாலும் நமக்குன்னு அம்மா அப்பா இல்லையேன்னு ரொம்ப தோனுதும்மா. நீயும் போன இந்த ஒரு வருசத்தில் எவ்வளவோ நடந்திடுச்சு. உன் மரணம் என்னை ரொம்ப மாத்திடுச்சும்மா. நீ இப்படி டக்குன்னு போவேன்னு நான் எதிர்பார்க்கலை.

ரொம்ப நாள் கழிச்சு இதை எழுதும் போது என்னவோ நினைப்பு வந்து வாய்விட்டு அழனும் போல இருக்கு. அம்மா. எப்பவாவது எங்களை பார்க்கனும்னு உனக்கு தோனிச்சா?  மின்மயானத்தில் இருந்து வரும் போது எப்படி இருந்துச்சு தெரியுமா? ஒரு மண் பானையில் இதான் உன் அம்மா அப்பான்னு வாங்கி ஆத்தில் கரைக்கும் போது உங்களை வைத்து கட்டின கனவுகளும் கரைஞ்சுடுச்சு.  ரொம்ப நாளா உன் புடவையை வச்சு தூங்கிட்டு இருப்பேன். இனி ஆயுசுக்கும் அப்படித்தான்னு நினைச்சு தாங்க முடியலைம்மா. எவ்வளவோ நாள் எத்தனையோ கஷ்டப்பட்டிருப்போம், ஆனாலும் உங்களோடு இருந்த அந்த சந்தோசமான நாட்கள் இனிமேல் வரவே வராதும்மா. அப்பா போனதும் பாதி போயிடுச்சு, நீயும் போனதும் உடம்பில் மனசில் இருந்து என்னமோ போயிடுச்சும்மா.

ரெண்டு பேரும் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இப்படி போயிட்டீங்க. எங்களுக்குன்னு யாரும் இல்லன்னு ஏன் தோனலை? ரோட்டில் யாராவது உங்க வயசில் போனாலே அவங்களிடம் உங்க ஜாடையை தேடுகிறேன். இந்த மாதிரிதான் அப்பா இருப்பாரு, அம்மா நடப்பாங்க, முடியலைம்மா.
போனில் உன் நம்பரைபார்த்தாலே கஷ்டமா இருக்குப்பா.ஊரு உலகத்தில் சின்ன வயசில் அம்மா அப்பாவை இழந்தவங்க எவ்வளவோ பேரு இருப்பாங்க. ஏன் உனக்கு கூட உன் அம்மா சின்ன வயசிலேயே இறந்துட்டாங்கல்லமா, ஆனாலும் அம்மா அப்பா உறவை விட வேறு எதுவும் தனியா சிறப்பானதா இல்லை.


அம்மா அப்பா எங்களோடவே இருங்க, மறந்துடாதீங்க.. எங்களுக்கு யாரும் இல்லைம்மா.
..

5 comments:

Jackiesekar said...

அம்மாவின் இழப்பு என்பது அனுபவிப்பவர்களுக்கு மட்டும் தெரியும்..

எங்களுக்கு யாரும் இல்லம்மா என்று சொல்ல வேண்டாம்.. நாங்க எல்லாம் இருக்கோம் தங்கச்சி கவலை வேண்டாம்

Vidhya Chandrasekaran said...

:(

சுசி said...

விஜி.. அவங்க எப்போதும் உன்னோடதான் இருக்காங்கடா..

Romeoboy said...

:(

Saravanan Arumugam said...

Idha padikkum podhu, ellaa vagaiyilayum, nalla petroraaga irukkanum, namma ponnum indha maadhiri eppavum nammala uyarvaa nenaikkanum, adhukku eppavum unmaiyaa irukkanum nu thonudhu... Hats off to your parents. They've given a very good generation - You.

Post a Comment

வந்தது வந்தாச்சு, எதாவது சொல்லிட்டு போங்க